Wednesday, October 29, 2014

தகைத்தவர் கொம்பினோடு உறைவோனே!


தனத்தனந் தந்த தான
    தனத்தனந் தந்த தான
        தனத்தனந் தந்த தான ..... தனதான



விளித்திடுங் தொண்டர் காண
    விருப்புடன் எந்த நாளும்
        விரைந்திடும் மஞ்ஞை யோடு வருவோனே!

    விளங்குமவ் வெற்பு மோதிப்
        பிளந்திடும் வெற்றி வேலும்
           திளைத்திடும் அன்பு நாளும் உடையோனே!

அளித்தொடுங் கொன்றை யோடு
    அனிச்சமும் வஞ்சி யாம்பல்
        அணித்துறும் செம்மல் சேட லதனோடு

    அடம்புசெவ் வல்லி யாரல்
        கடம்புவெண் தும்பை தோன்றி
             மடம்நிறைந் திட்ட ஞாழல் மடற்தாழை

களித்திடுஞ் செம்மல் சேடல்
    கரந்தையும் புன்னை பீரம்
        கவர்நிறப் பிண்டி வாகை யிருள்நாறி

    குறிஞ்சியுங் கண்ணி யோடு
        குருந்தமுந் தில்லை கோடல்
            செருந்தியுஞ் செம்மல் சேடல் உடனான

தளிர்க்கரங் கொண்டு லாவு
    தகைத்தவர் கொம்பி னோடு 
        திருப்பரங் குன்று லாவு முருகோனே!

    தனிப்பெருந் தெய்வ மாகித்
        தமர்க்குறுந் துன்ப மாற்று
            திருப்பரங் குன்று வாழும் பெருமாளே!

No comments:

Post a Comment