Sunday, October 26, 2014

குறக் கோதை உறைமார்பா!

தனதன தான தனதன தான
      தனதன தான ...... தனதான


அழகுரு வாகப் பரவிடு தோகை
      அருகினி லாடு மயிலோனே!
அணியொடு தோன்று கரமிரு ஆறு
      அருள்தரு வீர அயிலோனே!

தழையொடு பூத்த நறுமலர் யாவும்
      திரள்தரு கோவை யணிமார்பா!
திணையொடு பூத்த புனமது காத்த
      திகழ்குறக் கோதை யுறைமார்பா!

பழமென ஞான மொழியறி வாயப்
      புரமெரி யூட்டு இறையோனும்
பரவிய பாரின் உயிரது யாவும்
      பிறப்புற நாளு மறையோதும்

கிழவனுங் கேட்கக் கனியுள மேகிக்
      குழவியு மாகிப் பொருளோதிக்
கழனியு ளாக வுயர்திரு வேர
      கமமரு வானர் பெருமாளே!

No comments:

Post a Comment