Saturday, October 25, 2014

மலையுறை முருகோனே!

தனதன தனதன ..... தனதான


பனியுறை இறையவர் மகவோனே!
      பகையவர் குடிகெடு மயிலோனே!

இனியன அறம்பகர் இளையோனே!
     இமையவர் தொழுதிடும் இறையோனே!

தனியொரு நிகரறு தலைவோனே!
      தமிழொடு மலையுறை முருகோனே!

கனிமுதிர் மரமிக அடர்சோலை
      அழகுற அமர்ந்தருள் பெருமாளே!

No comments:

Post a Comment