Saturday, February 16, 2013

காதல்

காவற் துணையென எண்ணும் நெஞ்சோ
கானல் மலரெனத் தோன்றும் உவப்போ
காதற் துணையோ கனிவோ
காதல் யாதெனும் இனிதின் இனிதே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)

காதல் என்பது யாது? ஒரு துணையே காவல் என எண்ணும் நெஞ்சமோ? அந்த நெஞ்சத்தில் பாலையில் பூத்த மலர் போலத் தோன்றும் மகிழ்ச்சியோ? காதல் செய்யும் துணையோடு இருப்பதுதான் காதலோ? கனிந்த (பண்பட்ட) அன்புதான் காதலோ? எதுவாயினும், காதல் இனியவை அனைத்தினும் இனியது!

No comments:

Post a Comment