Sunday, January 13, 2013

பொங்கல் பொங்குக!

தும்பிக் குருளை கள்ளிற் திளைத்துத்
தும்பைப் பூவோ டூடித் திரியும்
இன்பத் தவரோ டூடிக் கூடி
அன்பும் அறனும் வளனுங் கொள்ளென்
றுதிளை நெஞ்சம் போலப்
புதுனெற் பொங்கற் பொங்குக பொங்குக!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)

தலைவி கூறுகிறாள்: தேனருந்தித் தும்பைப் பூவோடு சண்டையிட்டுத் திரியும் தும்பிப் பார்ப்பு போல் நானும் என் தலைவரோடு ஊடியும் பின் கூடியும் இருப்பேன். அவ்வாறு இருந்து அன்பும் அறமும் வளமும் கொண்டு இன்பத்தில் பொங்கித் திளைக்கும் என் நெஞ்சம் போல் புது நெல் பொங்கல் பொங்கட்டும்!

No comments:

Post a Comment