Wednesday, December 26, 2012

மான் ஈந்த மாது அணிமார்பா!

தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான



முயலு மான்மறி குலவு வேந்துடை
      மாடோ மானோ மானீ மாதோ அணிமார்பா!

மலரு மீன்புரை மணியு மார்கழல்
      தாளா தோளா வேளா ஆளா யெனவோதக்

கயமுங் காத்திடு கனிய நோக்கொடு
      காணா யூணா யூடா யூனா யுறைவோனே!

கரிய தீங்கிடு கொடிய கேட்டவர்க்
      காலா மேலா நீலா வேலா உனதாளைத்

துயல வேண்டிட நினையு மாந்தரைச் 
      சேராய் வாராய் தாராய் பாரா யருட்பார்வை!

தயித தாம்மென தயித தாம்மென
      தாதா தாதா தாதா தாதா எனஆடு

மயிலு னீண்டிடு மயிலு மேந்திய
      மாயா சேயா ஓயாத் தேயாப் புகழோனே!

மலையு வான்தொடு நிலையு மாண்டிடு
      பேரா ரூரா ஏரா வாரூர்ப் பெருமாளே!


No comments:

Post a Comment