தனன தனன தனன தனன
தனன தனன தனதான
எனது உளமு மருளி நிறையும்
எழிலி னழகு முருகோனே!
எளிய பிறவி முழுது முனது
அடியி லருளு மினியோனே!
நினது நினைவி லுறையுங் குறவர்
நிலவைப் பரவி யணைவோனே!
நிலனை யடியில் பணிய நினையு
மவுணர் குடியைக் களைவோனே!
கனலி லுலகி லுழலு முயிரைக்
கசியும் பரிவின் திரளான
கடலில் திளைய அறிவு பகருங்
கடம்பம் அணியும் அழகோனே!
புனலு மணியு மிறைவ னரிய
பதமும் பணியும் அறிவாளா!
கழலுங் கரிய விழியின் சுடருங்
கரமும் அருளும் பெருமாளே!
தனன தனன தனதான
எனது உளமு மருளி நிறையும்
எழிலி னழகு முருகோனே!
எளிய பிறவி முழுது முனது
அடியி லருளு மினியோனே!
நினது நினைவி லுறையுங் குறவர்
நிலவைப் பரவி யணைவோனே!
நிலனை யடியில் பணிய நினையு
மவுணர் குடியைக் களைவோனே!
கசியும் பரிவின் திரளான
கடலில் திளைய அறிவு பகருங்
கடம்பம் அணியும் அழகோனே!
புனலு மணியு மிறைவ னரிய
பதமும் பணியும் அறிவாளா!
கழலுங் கரிய விழியின் சுடருங்
கரமும் அருளும் பெருமாளே!
No comments:
Post a Comment