தனதனன தனன தந்தத் ...... தனதான
நிலைவழியு மொழியு மென்றும் பொழிவோனே!
தலைவனுமெந் தமிழு மள்ளித் தருவோனே!
மலையுருவ மரமு மிட்டுத் திரிவோனை
அலையுயர அயிலு மிட்டுப் பிளந்தோனே!
புனமெதிலு முயரு குன்றப் பெருவாழ்வே!
உனதருமை யழகு நித்தம் மறவாத
அகமுழுது நிறையு மன்பைத் தருவாயே!
முகைமலரு முகமு மேந்தும் பெருமாளே!
No comments:
Post a Comment