Friday, December 14, 2012

ஊடல்

ஊடல் உடைத்தே செஞ்சொற் சிதைய
ஊறல் உடைத்தேன் சுனைநிகர் விழியேன்
ஊதல் உடைத்துளை வேயார் நெஞ்சம்
ஊசல் உடைத்தே யவர்பால்
ஊடல் உடைத்தும் உளம் மாறிலனே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)

நல்ல சொற்கள் சிதைந்து உண்டான ஊடலின் பின்னும், தேன் போன்ற சுவையுடைய நீர் ஊறும் சுனையினை ஒத்த கண்களை உடைய எனது நெஞ்சம், காற்று ஊதும் துளைகளை உடைய மூங்கிற் குச்சி போல், ஊஞ்சல் போல்,  அவர்பால் செல்ல இன்னும் மாறாமல் தவிக்கிறது.

No comments:

Post a Comment