Friday, November 30, 2012

ஈண்டும் இனிதாய் ..

திங்கள் கண்டு புலம்பல் உறத்தேன்
திங்கள் கண்டு கொள்ளென வந்தவள்
திங்கள் கண்டது பன்னிரண் டோடியுந்
திங்கள் கண்டுந் திங்கள் கண்டுந்
திங்கள் கண்டகண் ணயர்வி லுறுமோ
திங்கள் கண்டீண் டுமினிது
திங்கள் கண்டுபல வாழ்வோம் வாழ்வோம்!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)

நிலவினைக் கண்டு புலம்பியபோது, உடன் கைப்பற்ற வந்தவளோடு ஓராண்டு வாழ்ந்தும், மாதங்கள் பல நிலவினைக் கண்டும் தெவிட்டாதது போல், இன்றும் இனிதாயுளது. இதுபோல் இன்னும் பலகாலம் இனிதே வாழ்வோம்.

No comments:

Post a Comment