Thursday, June 7, 2012

காப்பு

மறக்களத் தடினுந் தமர்கைச் சுடினும்
உறுமோர் அணியன் இம்மைப் பெறினே 
மறுமை காக்கும் அறம்போல்
திறந்தோட் திணிவொடு எஃகாத் தற்றே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)

எத்துன்பம் வரினும், உடன் பிறந்த இளையவன் ஒருவன் இப்பிறப்பில் இருப்பானாயின், மறுபிறப்பில் காக்கும் அறம் போன்றதும், எஃகால் ஆன காப்பினைப் போன்றதும் ஆகும்.

No comments:

Post a Comment