Sunday, October 9, 2011

அரிது

யான்,
உற்றதின் கற்றதின் படைத்ததின் அரிது
காட்சியின் எழிலும் நாணும் மடனும்
மாட்சியும் தெளிவும் அறிவும் செறிந்த
நெடுங்கயற் கண்ணுடை அரிவை
தொடுகோடிக் காந்தட் கரம்பிடிப் பதுவே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)

பிறப்பினால் வந்ததினும், கற்ற கல்வியினும், ஈட்டிய செல்வத்தினும் சிறப்பு மிக்கது யாதெனின், அழகும் அறிவும் மிகுந்த பெண்ணினை வாழ்க்கைத் துணையாகக் கொள்வதே ஆகும்!

No comments:

Post a Comment