Friday, September 23, 2011

பற்று

தமியோன் புலம்பும் புன்கண் மாலை
முல்லை இணரொடு எள்ளல் இல்லை!
முல்லை நீவிர் அடைதற் கேங்குமோர்
ஆம்பற் கார்குழல் அரிவை
காந்தட் கரம்யான் பற்றுத லாலே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)

நான் தனியே மாலையில் புலம்பிய போது, முல்லை மலர்கள் தம் கூட்டத்தோடு என்னை நோக்கி நகைத்தன. அவை அடைவதற்கு ஏங்கும் கருங்கூந்தலுடைய பெண்ணின் காந்தட் கரங்களை நான் பற்றுவதால், அவை என்னை நோக்கி இனி நகைக்க முடியாது!

No comments:

Post a Comment