காருடைப் புலத்தின் மடந்தநற் கொடியின்
நாறுடைத் திறத்தே தளிர்த்தே முல்லை
ஊருடைத் ததனால் உதிரலற் றுறுமோ?
வேருடைக் கிளையின் கூம்புதல் வருங்கால்
நீருடை நின்ற நிலத்தின்
ஆருடை முல்லை அலர்தலும் உண்டே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)
அழகிய மடம் பொருந்திய கொடியில் மணம் மிக்க முல்லை, ஊரார் போற்றப் பூத்ததனால் உதிராமற் போமோ? கூதிர் காலத்தில் உதிரல் உண்டாம்.
No comments:
Post a Comment