Thursday, October 21, 2010

துயரின் துயர்!

தனிமை என்பது கடுந்துயர் அன்று
தனிமை யின்யான் துயருடைப் பேனெனத்
தனிமை யிடையவர் படுதுயர் நினைவே
தனிமைத் துயரின் துயராம்
தனிமையிற் சென்ற தலைவர் வழியே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)


'யான் துயரடைவேன் என்று அவர் துயரடைவார்' என்னும் நினைப்பே, தனிமைத் துயரினும் கடுந்துயராம், தலைவன் பிரிந்து சென்ற தலைவிக்கு!

No comments:

Post a Comment