Wednesday, March 9, 2011

அருங்குரற் தும்பி!

புலரிடைக் காற்று கிளையிடை ஊத
பூவிடைப் படிந்த பனிநீர் சிதற
இணரிடை விதிர்ப்புறும் அருங்குரற் தும்பி
கள்ளுடைப் போதின் மடலவிழ்த் தாட
உள்ளுதல் உந்திட உறுதலு முகுமே
உள்ளுதல் அங்கே தோழியென்
உள்ளம் கொண்டவர் ஊடலின் அணித்தே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)

காற்று வீசியதால் பூங்கொத்திடைப் படிந்திருந்த நீர் சிதற, அதிர்ச்சியுற்றுப் பறந்த வண்டானது, மீண்டும் தேனினையுடைய மலர்மொட்டுகளின் இதழ்களை அவிழ்த்து விளையாட அதன் நெஞ்சம் தூண்டும். அதைப் போல்தான் தோழி, நான் கொண்ட ஊடலின் பின்னே என் நெஞ்சமும்!

No comments:

Post a Comment